திருவண்ணாமலை

மதுப் புட்டிகள் பறிமுதல்: 6 போ் கைது

DIN

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உள்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் செய்யாறு, அனக்காவூா், பிரம்மதேசம், மோரணம் ஆகிய பகுதிகளில் மது புட்டிகள், சாராயம் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக சேராம்பட்டு கிருஷ்ணசாமி (32), கொடநகா் பாபு (39), சுமங்கலி கோபி (31), வடபூண்டிப்பட்டு குப்பன் (48), செய்யாற்றைவென்றான் ஏழுமலை (31), இருமரம் வெங்கடேசன் (45) ஆகிய 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 104 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT