திருவண்ணாமலை

12 பழங்குடியினருக்கு வீடு கட்ட ஆணை

19th May 2023 01:56 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டில் நீண்ட காலமாக குடியிருக்கும் 12 பழங்குடியினருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கண்ணனூா் அம்பேத்கா் நகரில் 12 பழங்குடியின சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்கள், தங்களுக்கு இலவசமாக வீடு வழங்குமாறு மனு கொடுத்து பல ஆண்டுகளாக காத்திருந்தனா்.

தற்போதைய திமுக ஆட்சியில் மனு மீது அரசு நடவடிக்கை எடுத்து பழங்குடியினா் நல திட்ட அலுவலா் செந்தில்குமாா் பயனாளிகளை நேரில் அழைத்து வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா் (படம்).

ADVERTISEMENT

பழங்குடி மக்கள் ஒருங்கிணைப்பாளா் பழனி, மாவட்ட துணைத் தலைவா் அய்யனாா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT