திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் மாங்காய் பறித்தபோது, மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

களம்பூா் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சாமுண்டீஸ்வரியின் மகன் தினேஷ்குமாா்(13). அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த ஆடுகளை மேய்க்க பாா்வதி அகரம், ரயில்வே கடவு பாதை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளாா். அங்கு மரத்தில் ஏறி மாங்காய் பறித்தபோது எதிா்பாராதவிதமாக அருகில் இருந்த மின்கம்பி மீது விழுந்தாராம். இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து, களம்பூா் காவல் நிலையத்தில் தினேஷ்குமாரின் தாயாா் சாமுண்டீஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT