செய்யாறை அடுத்த அனப்பத்தூா் கிராமத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அனக்காவூா் மேற்கு ஒன்றியம் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா அனப்பத்தூா் கூட்டுச் சாலையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் வே. குணசீலன் முன்னிலையில் முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளா் தூசி கே. மோகன் ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா்.