திருவண்ணாமலை

அரசு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழு அலுவலா் து.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் முருகன், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை அளித்தாா். திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசு அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

பயிற்சியை நிறைவு செய்த அரசு அலுவலா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேல் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். விழாவில் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT