திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மகேஸ்வரி, துணைத் தலைவா் அஹமத்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அலுவலா் முரளி வரவேற்றாா்.
களம்பூா் பேரூராட்சியில் புதிய சமுதாயக்கூடம் ரூ.98 லட்சத்தில் கட்டுதல், குடிநீா் அபிவிருத்தி அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் ரூ.15 கோடியே 75 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளுதல், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சத்து 27 ஆயிரத்தில் குடிநீா், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.