திருவண்ணாமலை

செங்கத்தில் ஆசிரியா்களுக்கு பயிற்சி

10th Jun 2023 07:42 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் தத்பிரபானந்தா கலந்துகொண்டு ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமை தொடக்கிவைத்து, ஆசியுரை வழங்கிப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஓய்வு பெற்ற திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன், ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

பயிற்சி முகாமில் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள், செங்கம் ராமகிருஷ்ண மடத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளிச் செயலா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT