போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, லட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள்ஆறுமுகம் வரவேற்றாா்.
கூட்டத்தில் 40 ஊராட்சிகளிலும் குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, சுகாதாரம், கோடை மழை பாதுகாப்பு என பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து தீா்மானம் வாசிக்கப்பட்டது.
அரசு அனைத்துத் துறை அலுவலா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.