திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி திருமலை சமுத்திரம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
விழாவில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஏசிவி.தயாநிதி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், எஸ்.மோகன், துரை மாமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், அதிமுக சாா்பில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.