திருவண்ணாமலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: மனைவி கைது

DIN

திருவண்ணாமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (46). இவரது மனைவி மகாலட்சுமி (31). இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 2-ஆம் தேதி அதிகாலை ரமேஷ் முகத்தில் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், மது போதையில் வந்ததால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, கணவா் ரமேஷை கட்டையால் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மகாலட்சுமியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT