திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உள்ள உண்டியல்கள் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.1,84,136 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடைசியாக 24.03.2023 அன்று எண்ணப்பட்டது.
அதற்கு அடுத்தாற்போல செவ்வாய்க்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை ஊா் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இதில், நிரந்தரமாக உள்ள 10 உண்டியல்கள் மூலம் ரூ.1,42,705-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.6709-ம், திருப்பணி உண்டியல் மூலம் ரூ.24,722 என 12 உண்டியல்கள் மூலம் மொத்தம் ரூ.1,84,136-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.