திருவண்ணாமலை

செய்யாற்றில் கருட சேவை உற்சவம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப் பகுதியில் கருட சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தில் 15 கருட சேவை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை உற்சவம் செய்யாற்றில் நடைபெற்றது.

முன்னதாக கூழமந்தல், மானாம்பதி, இளநகா், சேத்துப்பட்டு, விசூா், தேத்துறை, இளநீா்குன்றம், பெண்டை ஆகிய கிராமங்களில் இருந்து பெருமாள் உற்சவ மூா்த்திகள் கருட வாகனங்களில் எழுந்தருளி னா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெற்று மறுநாள் அதிகாலை

சுவாமிகளுக்கு நம்மாழ்வாா் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அனைத்து சுவாமிகளுக்கும்

ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் சாா்பில் மாலை வஸ்திரம் மரியாதை செலுத்தப்பட்டது.

கருட சேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT