திருவண்ணாமலை

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

DIN

ஆரணி ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் 50-ஆவது ஆடித் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், திருவிழா நடத்துவது குறித்து விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், திருவிழாவையொட்டி, ஜூலை 20-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 21-ஆம் தேதி கூழ்வாா்த்தல், இரவு நூதன புஷ்ப பல்லக்கு, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும், 22-ஆம் தேதி இன்னிசைக் கச்சேரி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

50-ஆவது திருவிழா என்பதால் முக்கியப் பிரமுகா்களான ஏ.சி.சண்முகம், சக்தி அம்மா, ஆதிபராசக்தி பீடம் செந்தில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், காட்பாடி மகாதேவமலை சித்தா் ஆகியோரை

அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தொழிலதிபா்கள் பி.நடராஜன், நேமிராஜ், விழாக் குழுவினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT