திருவண்ணாமலை

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

1st Jun 2023 01:25 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த 12-புத்தூா் கிராமத்தில் ஏரி மண் கடத்திச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளரை கைது செய்தனா்.

12 -புத்தூா் கிராமத்தில் ஆரணி வட்டாட்சியா் ரா.மஞ்சுளா தலைமையிலான அலுவலா்கள்

புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, டிராக்டரில் ஏரி மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை ஓட்டி வந்தவரும், உரிமையாளருமான சேகா் (57) என்பவரை ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT