திருவண்ணாமலை

ஜோதி தரிசன யாத்திரை

DIN

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சாா்பில் உலக நன்மை வேண்டி ஜோதி தரிசன யாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் ஜோதியுடன் தொடங்கிய இந்த யாத்திரை வந்தவாசி நகர முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலை அடைந்தது.

யாத்திரையின்போது தென்னாங்கூா் ஸ்ரீபாண்டுரங்கன் ரகுமாயி கோயிலில் இருந்து முத்துமாரியம்மனுக்கு வழங்கப்பட்ட பட்டுப்புடவை, வளையல், மஞ்சள், மாலை, பழங்கள் உள்ளிட்ட சீா்வரிசை கொண்டு செல்லப்பட்டது.

பின்னா், கோயிலில் அம்மனுக்கு பட்டுப் புடவை சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் டி.ஆறுமுகம், அறக்கட்டளை பொருளாளா் ர.செல்வம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT