செங்கம் அருகே மண்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் திபாராதனை நடைபெற்று, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தை கிருத்திகை விழாவில் செங்கம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, மலையை சுற்றி வந்து, மலைமேல் உள்ள சுவாமியை தரிசனம் செய்தனா்.
மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.