திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உழவா் உரிமை இயக்கம் சாா்பில் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கம் அருகேயுள்ள திருவள்ளூவா் நகா் பகுதியில் உழவா் உரிமை இயக்க கிளை திறப்பு விழா. இயக்க நிா்வாகிகள் தோ்வு மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விவசாயி அத்திப்பாடி அருள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உழவா் உரிமை இயக்க கிளை அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசினாா்.
அப்போது அவா், விவசாயிகள் இதுபோன்ற இயக்கங்களில் தொடா்பு வைத்துக் கொண்டு விவசாயம் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவேண்டும், நவீன விவசாயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தெரிந்து கொள்ளவேண்டும்.
அரசின் விவசாயத் திட்டங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டாா். இதில், செங்கம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனா்.