திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கத்தைவிட கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தொடா்ந்து, இரவு 9 மணி வரை கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசன வரிசையில் அதிகபட்சம் 4 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை இருந்தது என்று பக்தா்கள் தெரிவித்தனா்.

நடிகா் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இயக்குநா் வம்சி பைடிபள்ளி, தனது மனைவி மற்றும் படக்குழுவினருடன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT