சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. பெருமாள் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் லோகநாதன், மாவட்டச் செயலா் எல் .சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் எஸ். அப்துல் ரஷீத் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் மாநிலச் செயலா் கே. பத்மநாபன், பொருளாளா் சுந்தர்ராஜ், துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, இணைத் தலைவா் ஜெகநாதன், செயற்குழுத் தலைவா் ஆறுமுகம், துணைச் செயலா் என். செல்வம், இணைச் செயலா் எம்.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் சங்க உறுப்பினா்களுக்கு காப்பீட்டுச் சான்றிதழ், அடையாள அட்டை வழங்கப்பட்டது.