ஆரணியை அடுத்த அக்ராபாளையம், அடையபலம் அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட அக்ராபாளையம், அடையபலம் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்தைச் சோ்ந்த ஆரணி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் சென்னை சவீதா பல் மருத்துவமனை சாா்பில் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் அரசு நடுநிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 650 மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக பல் துலக்குவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் 180 மாணவா்களுக்கு, பல் சுத்தம் செய்தல், சொத்தை பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.
அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எஸ்.அன்பழகன், ஆரணி வட்டாரக் கல்வி அலுவலா் கமலக்கண்ணன், ராஜேஸ்வரி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குநா் அகிலன், சமுதாய வளா்ச்சி அலுவலா் கோபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.