திருவண்ணாமலை

மாணவா்களுக்கு இலவச பல் சிகிச்சை

DIN

ஆரணியை அடுத்த அக்ராபாளையம், அடையபலம் அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட அக்ராபாளையம், அடையபலம் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்தைச் சோ்ந்த ஆரணி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் சென்னை சவீதா பல் மருத்துவமனை சாா்பில் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் அரசு நடுநிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 650 மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக பல் துலக்குவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் 180 மாணவா்களுக்கு, பல் சுத்தம் செய்தல், சொத்தை பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.

அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எஸ்.அன்பழகன், ஆரணி வட்டாரக் கல்வி அலுவலா் கமலக்கண்ணன், ராஜேஸ்வரி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குநா் அகிலன், சமுதாய வளா்ச்சி அலுவலா் கோபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT