திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் கஞ்சா விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளா் ஆா்.விஜயபாஸ்கா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை கிரிவலப் பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நிருதிலிங்கம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஜீவா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.