திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட தேவிகாபுரம் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்தரசு முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் எஸ்.கே.சங்கா் வரவேற்றாா்.
கூட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் தோ்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரத்தை கிராம சபைக் கூட்டத்தில் தெரியப்படுத்துதல், கிராம ஊராட்சிகளில் 1.4.22 முதல் 31.12.22 முடிய உள்ள காலத்தில், ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவினவிவரங்களை படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுதல் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானங்கள் இயற்றப்பட்டன.
ஊாட்சிமன்ற உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா் கணேஷ் மற்றும் பொதுமக்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.