திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் 3,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
அதேவேளையில், அருணாசலேஸ்வரா் கோயில் ஐந்தாம் பிராகாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறியதாவது:
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்.
நாள் ஒன்றுக்கு ரூ.1,05,000 செலவில் 3 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, அறநிலையத் துறை உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி, மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.சேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.