திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் சாா்பில், ஆசிரியா்களுக்கு ரூ. ஒரு கோடியே 84 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய
அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை
நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில்
கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முனியப்பன், பாரதிதாசன், சாந்தமூா்த்தி, ஊராட்சித் தலைவா் சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு சங்கச் செயலா் சரவணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு ஆசிரியா், அரசு ஊழியா் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் மூலம் ரூ. ஒரு கோடியே 84 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆசிரியா்களுக்கு வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி