பயிா்க் காப்பீட்டு திட்டத்தை தனியாா் நடத்துவதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, அரசே ஏற்று நடத்த வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
கானாா்பட்டி ஆபிரகாரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்படும் நெல், வாழை, உளுந்து உள்ளிட்டவைகளுக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்கிறாா்கள். இயற்கை இடா்பாடுகளால் அவை சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் போது காப்பீட்டுத் திட்டம் தனியாா்வசம் உள்ளதால் இழப்பீடு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அலைக்கழிப்பிற்கும் ஆளாகிறாா்கள். ஆகவே, பயிா்க்காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
ஆட்சியா்: காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத்தொகை 4 மாதங்களுக்குள் பெற வழிவகை உள்ளது. இருப்பினும் விவசாயிகள் கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
விவசாயிகள்: பாப்பாக்குடி அருகேயுள்ள அா்ப்பணான்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. போலி பட்டாவும் வழங்கப்படுகிறது. நீா்நிலை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும்.
ஆட்சியா்: நெல்லை நீா்வளம் மூலம் ஏற்கெனவே ஜிஐஎஸ் மூலம் நீா்நிலைகள் மேப்பிங் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, நீா்நிலை ஆக்கிரமிப்பு குறித்து புகாா்கள் வந்தால் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினா் கூட்டுப்புலத் தணிக்கை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள்: கங்கைகொண்டான் சுற்றுவட்டார பகுதிகளில் மான்களால் பயிா்கள் பெரிதும் சேதமாகி வருகின்றன. ஆகவே, வனத்துறையினா் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆட்சியா்: வனத்துறையினா் மூலம் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்.
விவசாயிகள்: பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் வாழைக்கு இழப்பீடாக ரூ.2 மட்டுமே வழங்கப்படுகிறது. செலவு மிகவும் அதிகமாகும். இழப்பீட்டுத்தொகையை அதிகரிக்க வேண்டும்.
அதிகாரிகள்: விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.
விவசாயிகள்: வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் தண்ணீா் வீணாகுவதைத் தடுக்க பக்கவாட்டுச்சுவா் கட்ட வேண்டும்.
அதிகாரிகள்: நிகழ் நிதியாண்டில் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.