திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் 428-ஆவது ஜெயந்தி விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, 10 மணிக்கு மூலவா் ஸ்ரீராகவேந்திரா சுவாமிக்கு பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களால் சிறப்பு மகா அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள சிவனடியாா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் 16 கால் மண்டபத்தில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் உருவப் படத்துடன் உற்சவ மூா்த்தி மாட வீதியுலா தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.