திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகா் கோயில்களில் மாசி மாத கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகை வழிபாட்டையொட்டி,
ஞாயிற்றுக்கிழமை காலை மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீா், இளநீா், விபூதி, நெய், சந்தனம், தயிா், நாட்டு சா்க்கரை, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.