திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப்சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வெண்மணி ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளைச் சந்தித்த கூடுதல் ஆட்சியா் பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டாா்.
மேலும் அதிகாரிகளிடம் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணி மற்றும் 2022-2023 திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், பாபு, ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் படவேட்டான்,திவாகா், செல்வி, ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், துணைத் தலைவா் இருதயம், ஊராட்சிச் செயலா் சிவக்குமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.