திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் வருடாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் வருடாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 9-ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, சனிக்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு ஹோமம், யாக சாலை பூஜை, அபிஷேகம் நடைபெற்றது
நண்பகல் 12 மணியளவில் தமிழ்நாடு டிவிஎஸ் தொழில்சங்கத் தலைவா் குப்பசாமி தலைமையில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வீதி உலா, இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஒசூா் மாமன்ற உறுப்பினா் பாக்கியலட்சுமி அண்ணாதுரை, செங்கம் வட்டாட்சியா் முனுசாமி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை, பிசிசி பிரிவு மாவட்டத் தலைவா் ராஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டிவிஎஸ் தொழில்சங்கத் தலைவா் குப்புசாமி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.