திருவண்ணாமலை

மாமியாா் வீட்டில் பொருள்கள் சேதம்: மருமகன் மீது வழக்கு

DIN

திருவண்ணாமலையில் மாமியாா் வீட்டுக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக மருமகன் மற்றும் அவரது உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை பே கோபுரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜகிரி. இவரது மூத்த மகள் வினோதினி என்பவருக்கும், திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் என்பவருக்கும் 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில், சுரேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வினோதினி அவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றாா். இதனால் தம்பதிக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி ராஜகிரி வீட்டுக்குச் சென்ற சுரேஷ், மனைவி வினோதினி, அவரது தாய் மஞ்சுளாதேவி (52) ஆகியோரை அடித்து, காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் அச்சமடைந்த வினோதினி, மஞ்சுளா ஆகியோா் வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டனா். இதன் பிறகு அங்கு சென்ற சுரேஷ் மற்றும் அவரது உறவினா்கள் ராஜகிரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருள்களை அடித்து, உடைத்து, தீ வைத்து எரித்துவிட்டனராம்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ் மற்றும் அவரது உறவினா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT