திருவண்ணாமலை

பைக்கிலிருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

DIN

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (37). இவா், மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதியில் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரும், இவரது நண்பரான சுரேஷ் என்பவரும் கடந்த 2 -ஆம் தேதி அச்சிறுபாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அன்று இரவு ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

வந்தவாசி-செய்யாறு சாலையில் அனக்காவூா் தனியாா் கல்லூரி அருகேயுள்ள வளைவுப் பகுதியில் வந்தபோது, பைக் திடீரென நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

அவ்வழியாகச் சென்றவா்கள் அவா்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இருவரில் சக்திவேல் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் அனக்காவூா் காவல் ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் கன்னியப்பன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT