திருவண்ணாமலை

காா் மோதியதில் பெண் பலி

DIN

வந்தவாசி அருகே காா் மோதியதில் மொபெட்டில் சென்ற பெண் பலியானாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன்(48). இவரது மனைவி பவானி(43).

கடந்த வியாழக்கிழமை மாலை இவா்கள் இருவரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபெட்டில் மருதாடு நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

மருதாடு கிராமம் அருகே சென்றபோது இவா்களுக்கு பின்னால் வந்த காா் மொபெட் மீது மோதியது.

இதில் காயமடைந்த இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதில் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பவானி அங்கு வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT