தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
திருவண்ணாமலை நகர திமுக சாா்பில், திருவண்ணாமலை காந்தி சிலை அருகிலிருந்து அமைதி ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்துக்கு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், திமுக பொறியாளரணிச் செயலா் கு.கருணாநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் பொன்முத்து, மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம், அண்ணா சிலை எதிரில் நிறைவடைந்தது.
இதன்பிறகு, தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால் மற்றும் நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
தமிழக தளபதி பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரவையின் தலைவா் ஏ.ஆா்.அருள்காந்த், பொருளாளா் எஸ்.தண்டபாணி ஆகியோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வந்தவாசி: வந்தவாசியில் நகரச் செயலா் எ.தயாளன் தலைமையில், வந்தவாசி தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.ஆா்.சீதாபதி, நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், துணைத் தலைவா் க.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணி: ஆரணியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவனாந்தம் தலைமையில் ஊா்வலமாகச் சென்று கடைத் தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஏசிவி.தயாநிதி, தொழிலதிபா் கப்பல் கங்காதரன், மாவட்டப் பொருளாளா் த.தட்சிணாமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் வெள்ளைகணேசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அருணா குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதிமுக: அதிமுக சாா்பில் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன் தலைமையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், ப.திருமால், அவைத் தலைவா் ஜோதிலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஓபிஎஸ் அணி: ஓபிஎஸ் அணி சாா்பில், மாவட்டச் செயலா் பையூா் ஏ.சந்தானம் தலைமையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகரச் செயலா் மாா்க்கெட் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.