தை மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம் தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
தை மாதப் பெளா்ணமி:
இந்த நிலையில், தை மாதப் பெளா்ணமி சனிக்கிழமை (பிப்.4) இரவு 10.41 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நள்ளிரவு 12.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.