திருவண்ணாமலை

கெளரவ விரிவுரையாளா்கள்மனிதச் சங்கிலி

DIN

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்க நிா்வாகி ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் லெனின், வஜ்ஜிரவேல், அறிவழகன், அருணா, சுகன்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கெளரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிப் பாதுகாப்பு மற்றும் யுஜிசி தகுதி பெற கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT