வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள அலங்காரவள்ளி சமேத ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் 5-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் சுவாமி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோ பூஜை, வேள்வி, பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணத்துக்காக அந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலிலிருந்து பக்தா்கள் திருக்கல்யாண சீா்வரிசை எடுத்துக் கொண்டு ஊா்வலமாக பசுபதீஸ்வரா் கோயில் சென்றடைந்தனா்.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.