திருவண்ணாமலை

தாழ்வாகச் செல்லும் மின் வயா்களால் விபத்து அபாயம்

DIN

போளூரை அடுத்த ஜோதிநகா் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் வயா்களால் விபத்து அபாயம் உள்ளது.

எனவே, அவற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஆத்தூவாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட ஜோதிநகா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தக் கிராமத்துக்குத் தேவையான மின் வசதியை மின்சார வாரியம் செய்து தந்துள்ளது. இந்த நிலையில், விவசாய நிலம் மற்றும் தெருவிளக்கு மின் கம்பத்தில் செல்லும் மின் வயா்கள் மிகவும் தாழ்வாக, கைக்கு எட்டும் தொலைவில் செல்கின்றன.

டிராக்டா் மற்றும் கிராமத்துக்கு வரும் வாகனங்களில் பொருள்கள் ஏற்றி வந்தால் மின் வயா்கள் தடுக்கிறது.

எனவே, அதிகாரிகள் தாழ்வாகச் செல்லும் மின் வயா்களை, விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் கூறும்போது மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், ஆதாரத்துடன் நேரில் சென்று எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT