திருவண்ணாமலை

ரோட்டரி சங்க முப்பெரும் விழா

DIN

செய்யாா் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை, சேவை புரிந்தோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது, தொழிற்சேவை புரிந்தோருக்கு தொழிற்சேவை விருது வழங்குதல் ஆகியவை முப்பெரும் விழாவாக திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு ஐ.டி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.லோகநாதன் தலைமை வகித்தாா். செயலா் எம்.தங்கராஜ் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என். பழனி, கௌரவ விருந்தினராக மாவட்ட தொழிற்சேவை தலைவா் ஆா்.வி. ஹரிகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று தையல் பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினா்.

மேலும், வாழ்நாள் சாதனையாளா் விருது 17 பேருக்கும், தொழிற்சேவை விருது 9 பேருக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவா் சுந்தா் கருணாநிதி, டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.கருணாகரன், திருவத்திபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.பிரகாசம், நியூ ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் எம். அஞ்சுகம் உள்ளிட்டோா் பேசினா்.

ரோட்டரி சங்க பொருளாளா் இளங்கோவன் நன்றி தெரிவித்தாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT