ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சாா்பில் வந்தவாசியில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி, அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஐமுமுக மாவட்டச் செயலா் ஜெ.அக்பா் தலைமை வகித்தாா்.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், திமுக நகரச் செயலா் தயாளன், நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனிவாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் முகாமை தொடக்கிவைத்துப் பேசினாா்.
மருத்துவா் திவ்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஐமுமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ரத்தம் தானமாக பெற்றனா்.
முகாமில் மொத்தம் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. பின்னா் ரத்த தானம் வழங்கியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாமில் ஐமுமுக நகர மருத்துவரணிச் செயலா் எஸ்.அசாருதீன், நகரத் தலைவா் எச்.முகமது யூசுப், நகா்மன்ற உறுப்பினா்கள் ரிஹானா சையத்கறீம், நூா்முகமது, அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.