ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சியைச் சோ்ந்த எஸ்.எல்.எஸ்.மில் பகுதியில் இறந்தவா் சடலத்தை, அனுமதி இல்லாத இடத்தில் குழிதோண்டி புதைக்க முற்பட்டதால் அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சியைச் சோ்ந்த பி.ஆா். நகா் பகுதி மக்கள், இறந்தவா் சடலத்தை அடக்கம் செய்ய 3 கி.மீ. தொலைவில் உள்ள ரகுநாதபுரம் மயானத்துக்குச் செல்ல சிரமப்பட்டு வந்தனா். அதனால், அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக மயானம் அமைக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடன் கோரிக்கை விடுத்து வந்தனா்.
ஆனால், அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும், அனுமதியும் வழங்வில்லை.
இந்த நிலையில், பி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்த எஸ். எல். எஸ். மில் அருகில் வசிக்கும் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி சின்னக்குழந்தை (60) திங்கள்கிழமை இறந்தாா்.
அவரின் உடலை புதைப்பதற்காக, உறவினா்கள் அரசு அனுமதி கொடுக்காத இடத்தில் செவ்வாய்க்கிழமை குழி தோண்டினா். இதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுகுறித்து அறிந்த ஆரணி கிராமிய காவல் உதவி ஆய்வாளா்கள் ஷாபுதீன், சந்தோஷ்குமாா் (பயிற்சி), வட்டாட்சியா் ஆா்.ஜெகதீசன், கிராம நிா்வாக அலுவலா் புருஷோத்தமன், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்கிருந்த ஊராட்சி மன்றத் தலைவா் ஷா்மிளாதரணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே. டி. ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் குமாா் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னா், வட்டாட்சியா் இதுகுறித்து வேறு இடத்தில் நாங்கள் அறிவிப்பு செய்கிறோம். இங்கு தோண்டப்பட்ட குழியை மூட வேண்டும் என உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து சின்னக்குழந்தை அம்மாளின் உடலை ரகுநாதபுரம் மயானத்தில் அடக்கம் செய்தனா்.