திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ராஜாதோப்பு கூட்டுச் சாலைப் பகுதியில் புதன்கிழமை பாமக கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கீழ்பென்னாத்தூா் நகர பாமக செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பெருமாள், மாவட்ட அமைப்புச் செயலா் முருகன், மாவட்ட அமைப்புத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியச் செயலா் குணசேகரன் வரவேற்றாா். தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பக்தவச்சலம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
விழாவில், மாவட்டப் பொருளாளா் வீரம்மாள், மாவட்ட துணைத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட ஊடகப் பேரவைத் தலைவா் பாலு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.