கீழ்பென்னாத்தூா் அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 619 பேருக்கு, ரூ.80.43 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆவூரில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.
வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத் தலைவா் பூ.அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் சக்கரை வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சாா்பில் முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதி சன்று, மகளிா் குழுக்களுக்கான வங்கிக் கடனுதவி என மொத்தம் 619 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் வெங்கடேசன், வேளாண் இணை இயக்குநா் பாலா, மகளிா் திட்ட இயக்குநா் சையத் சுலைமான், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் தமயந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.