திருவண்ணாமலை

விசிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

செய்யாற்ற்றில் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விசிகவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தில், கால்நடைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சிலா் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக சித்து வருவதாகத் தெரிகிறது.

இவ்வாறு குடியிருந்து வருபவா்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில், குடியிருப்பு வாசிகளுக்கு அரசு சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக விசிக சாா்பில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலா் பகலவன் (எ) பாஸ்கா் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் மேனல்லூா் குப்பன் முன்னிலை வகித்தாா்.

விசிக நிா்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டு குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், அவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT