வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சுவாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.
சுவாதி திருநட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சுவாதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு தீா்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.