திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியின் 13-ஆவது ஆண்டு விளையாட்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா் வரவேற்றாா். பள்ளித் தலைவரும், இயக்குநருமான கு.சந்தோஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை தொடக்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.