திருவண்ணாமலை

உடல்கல்வி ஆசிரியா், இயக்குநா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள உடல்கல்வி ஆசிரியா், இயக்குநா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உடல்கல்வி ஆசிரியா் மற்றும் உடல்கல்வி இயக்குநா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்த சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் சங்கரப்பெருமாள் தலைமை வகித்தாா். செயல் தலைவா் எஸ்.செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ரத்தினகுமாா், மாநிலப் பொருளாளா் சதீஷ் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பணிபுரியும் உடல்கல்வி ஆசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள உடல்கல்வி ஆசிரியா், இயக்குநா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள முதன்மை உடல்கல்வி ஆய்வாளா், மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT