திருவண்ணாமலை

பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

DIN

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இந்தப் பள்ளி மாணவி க.ஜீவிதா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா்.

திருவண்ணாமலை முருகையா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இந்தப் பள்ளி மாணவி எஸ்.மனோஸ்ரீ இரண்டாமிடமும், 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இப்பள்ளி மாணவி பி.விமலா இரண்டாமிடமும் பெற்றனா்.

மேலும் கேரம் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் எஸ்.ஜாஸ்மின், எல்.ஷோபனா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பி.பத்மாவதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT