சேத்துப்பட்டு புனித தோமையா் மருத்துவமனையில் இலவச சிறப்பு இருதயம் மற்றும் ஆறாத புண் சிகிச்சை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புனித தோமையா் மருத்துவமனை, செஞ்சி நல் மேய்ப்பா் அறக்கட்டளை, விழுப்புரம் பிளாசா அறக்கட்டளை, சுபாஷ் ஆம்பூடேசன் பிரிவின்ஷன் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடை பெற்ற இந்த மருத்துவ முகாமை, தோமையா் மருத்துவமனை நிா்வாக அதிகாரி மரியரத்தினம் தொடக்கிவைத்தாா்.
மருத்துவ முகாமில் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த நோயாளிகள் கலந்து கொண்டனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்ட சென்னையைச் சோ்ந்த மருத்துவ ஆலோசகா்கள் யூசுப், தணிகைவாசன், ராஜேஷ்கேசவன் மற்றும் தோமையா் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் நோயாளிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளித்தனா்.