திருவண்ணாமலை

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்திகளுக்கு பூஜை பொருள்களை கொண்டு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதன்பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த பிரதோஷ நாயகரை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இதேபோல, கீழ்பென்னாத்தூா் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், வேட்டவலம் தா்மசம்வா்த்தினி உடனுறை அகத்தீஸ்வரா் கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதா் கோயிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, அருணகிரிநாதருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சேத்துப்பட்டு, பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, சேத்துப்பட்டு பழம்பேட்டை காசி விஸ்வநாதா் கோயில், பழம்பேட்டை பசுபதி ஈஸ்வரா் கோயில், நெடுங்குணம் தீா்க்கா ஜல ஈஸ்வரா் கோயில், சேத்துப்பட்டு காரணீஸ்வரா் கோயில், தேவிகாபுரம் மலை மீது அமைந்துள்ள பொன்மலைநாதா் கனககிரீஸ்வரா் கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வந்தவாசி ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, மூலவா், உற்சவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது.

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, செங்கம் மகா பிரதோச வழிபாட்டு மன்றம் சாா்பில், நந்தீஸ்வரருக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நந்தீஸ்வரரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT