திருவண்ணாமலை

பண்ணைக் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணைக் கருவிகளை 25 சதவீத மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வழங்கி, அவா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், வேலூா் அடங்கிய வட கிழக்கு மண்டலத்தில் பயனாளிகளைத் தோ்வு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவா் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலையில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை 04175 - 236021, 94450 01119 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT